Wednesday, April 20, 2011

ஜெயஸ்ரீ Maiden

அன்பிற்கினிய சிற்றப்ப அவர்களே
கலிபோர்னிய சென்றாலே கவியாகி விடுவரோ
கவனமுடன் நானும் கற்றுத்தான் பார்க்கிறேன்
கனியவில்லை கலையும்
எழத்து கூட்டி எழுதி பார்க்கிறேன்
என் புத்திக்கு எட்டவில்லை எதுவும்
படித்துதான் பார்க்கிறேன்
பணியவில்லை சிறிதும்
உழைத்துதான் பார்க்கிறேன்
உரைக்கவில்லை ஒன்றும்
அப்பப்பா ஆளை விடுங்கள்
அலுத்துப் போனேன் நானும்
ஆசையை தீர்த்துக் கொள்கிறேன்
அழகாய் படித்துப் பார்த்தே !!!!!!!!!!!!!
அன்புடன்
ஜெயஸ்ரீ
(பிழைகள் பொறுக்க வேண்டுகிறேன் )

No comments:

Post a Comment