இது என்ன கூத்து அதிரடியாக
மகிழ்ந்தோம் கவிதை பார்த்து
மந்திரி எங்கே அந்த நவரத்தின மாலை
கொண்டு வா பரிசளிபதிற்கு
இந்த நவரத்தின கவிதைக்கு
ஐயப்ப சுவாமி படி பாட்டு போல
குடும்பத்தின் தல வரலாறு
நான் பின் வாங்கிவிட்டேன் இனி கவிதை பாட
அம்மம்மா இனி தாங்காது போல
ஓடிக்கொண்டு இருக்கிறேன் காத தூரம்
சரியான குடும்பமட இந்த ஆலமரம்
மாட்டி கொண்டு விட்டேனட நானும்
ஆரம்பமே சிக்ஸர்
எங்கயோ போய் விட்டீர்கள் மேல மேல
ஆரம்பியுங்கள் ப்ளாக் ஸ்பாட் போட
தம்பிக்கு உறுதுணையாக
வளர்க்கும் பொழுது உங்கள் அம்மா
வூட்டி விட்டிருப்பர்களோ ஞான பாலை
சரளமாக வெளி வருகிறது இந்த கவி மாலை
குடும்பத்திலிருந்து சாரல் சாரலாக
நானும் சளைக்கவில்லை என சவாலாக
எங்கள் குழந்தைகளையும் மறந்து விட்டீர்
என் சக தர்மினியையும் மறந்து விட்டீரோ
இந்த கவிதை அவர்களை அடைவதற்கு
நன்றாக ரசிப்பார்களே அவர்களும்
தொடரட்டும் இந்த அருமையான தொண்டு
சிறப்பாக போட்டி போட்டுகொண்டு
மந்திரி எங்கே அடுத்த கவினர்
நாகராஜா ஐயர் குடும்பத்திலிருந்து
வர சொல்லுங்கள் கவிதையோடு
வியப்புடன்
அத்திம்பேர்
No comments:
Post a Comment