Wednesday, March 16, 2011

மனிதா - யார் நீ? தொடர் பகுதி 1

முகப்புரை:
சின்னத்திரை, தொலை பேசி, வலை விரிவு வந்தாலும் வந்தது, மனிதமே தொலைத்து போய்விட்டது, இது நமது குடும்ப அங்கதினருக்கு நான் பகிரபோகும் வாரந்திர தொகுப்பு:
முடிந்தவரை முயற்சிக்கிறேன், உங்கள் அன்பும், அரவணைப்பும் மற்றும் நிரந்திர பகிர்வுகளும், இந்த தொகுப்பின் ஊன்றுகோல்கள்:
ஆசான் வந்தனம்:
கவிதை எழுதும் நேரமிது
கடவுள் வழி காட்டுவார் தெரியுமது
நன்றி சொல்ல வந்தேன் சுந்தரரை
நமக்கு தெரிந்ததை எழுதுவேன் வந்தவரை.
நினைவலைகள்:
விட்டேன் முன்பு பாதியை, தொடர நினைக்கிறன் மீதியை
வரும் வரை உரைப்பேன் நீதியை; மற்றபடி எல்லாமே மாயை!!!
சொல்லுக்கு முன் :
மண்ணில் பிறந்தான் மானிடன்
தண்ணீரில் பிரிந்தது மீன்
விண்ணிலே பிறந்தது விடி வெள்ளி, என்
கண்ணீரில் பிறந்தது இந்த கவிதை
மனிதன், யார் நீ:
சொல்லலாம் கதை கதையாய்;
யாருக்கு வேண்டும் துயரக்கதை.
மனிதன் நினைப்பது தன்னை மட்டுமே, அவனுக்கு
மற்றது யாவும் அஹ்றினை!
வெற்றிக்கு மட்டுமே மயங்கும் மனிதன்
சற்று யதார்த்தமாய் சிந்திக்க தயங்கும் போதும்
நடைமுறைக்கு உதவாத நாகரீகங்களும்
பகட்டும், பண்பற்ற நடவும்,
உலகமே உன் கையில் என்ற உணர்வும்,
அழியும் காலம் வரும் வரை
கண் திறக்க மறுப்பான்,
பின் கதறி அழுவான்,
பொருளெல்லாம் உனது என்பான்,
தான் சொன்னது செய்தது எல்லாம் பொய் என்பான்,
மானிடா இது பிறவிப்பயனில்லை,
உன் பிறவே பயனில்லை.
சரி யார் மனிதன்,
அவன் கடவுளா? மிருகமா?
..............இன்னும் வரும்.....................
--
N. Bhaskaran
+919820807258

No comments:

Post a Comment